இடுகைகள்

பிறர் கூறுவதை காட்டிலும் உங்கள் சொந்த கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.

படம்
 வாழ்க்கையில் நாம் பல முக்கியமான தருணங்களை சந்தித்து இருப்போம். அந்த தருணத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய  கட்டாயத்தில் இருந்திருப்போம்.  இந்த சமயத்தில் தான் நம்மை சுற்றியுள்ள உறவினர்கள், நண்பர்கள் என மக்கள் அனைவரும் நம்மிடம் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களைக் கூறுவார்கள்.  இது பொதுவாக எல்லோருக்கும் நடக்கும் விசயம் தான். ஆனால் இது போன்ற பலவிதமான கருத்துக்கள் நமக்கு சந்தேகங்களையும், குழப்பங்களையும், பயத்தையும் உண்டாக்கும்.  எல்லோரும் என்ன இப்படி கூறுகிறார்கள் என்ற எண்ணம் உருவாகும். சரியான முடிவை நாம் எடுக்க வேண்டும் என்ற ஒரு செயற்கையான கட்டாயமான சூழலை நாமே நமக்கு அமைத்துக் கொள்வோம்.  இவையனைத்தும் இருக்கக்கூடிய விசயங்கள் தான். இதுபோன்ற தருணங்களில் உங்களுடைய சொந்த முடிவுகளை எடுங்கள். உங்கள் இதயத்தில் இருந்து எழக் கூடிய கருத்திற்கு முன்னுரிமை அளியுங்கள்.  உங்கள் வாழ்விற்கான முடிவுகளை நீங்களே எடுங்கள். அது எவ்வளவு பெரிய தோல்வியை அடைந்தாலும் பரவாயில்லை. அல்லது அது மிகப் பெரிய வெற்றியை அடைந்தாலும் பரவாயில்லை. உங்களுடைய வாழ்க்கையை நீங்களே தீர்மானியுங...

தொடங்குங்கள் முடிந்துவிடும்

படம்
 பொதுவாக நம் எல்லோருக்கும் சில கனவுகள் இருக்கும் அல்லது புதிய முயற்சிகளை தொடங்க வேண்டும் அல்லது புதிய பழக்கங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வாழ்க்கையில் நம்மை மேம்படுத்திக் கொள்ள நாம் புதிய முயற்சிகளைத் தொடங்குவோம்.  உதாரணமாக, காலையில் உடற்பயிற்சி செய்வது, நடைபயிற்சி மேற்கொள்வது போன்ற விசயங்களில் தொடங்கி தொழில் தொடங்குவது, இணைய தளங்களில் உங்களுக்கு என்று ஒரு புதிய பக்கத்தை உருவாக்குவது போன்ற விசயங்களாகட்டும். இதற்கெல்லாம் ஒரு நேரம் வரட்டும், பார்த்துக்கொள்வோம் என்று விட்டு விடுவோம். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தொழில் தொடங்குவது, மற்றும் கனவுகளை நோக்கிய பயணத்தைத் தொடங்குவது போன்ற நல்ல விசயங்களுக்கு நல்ல நாளையும் நல்ல நேரத்தையும் எதிர்ப் பார்த்துக் காத்துக் கொண்டிருப்போம். உடற்பயிற்சி கூடத்திற்கு (GYM) செல்வதற்கு சரியான உடைகள் இல்லையே என்று எண்ணுவது. தொழில் தொடங்க போதுமான முதலீடு அல்லது இடமோ இல்லை என்று காத்திருப்பது. இவையெல்லாம் நேர விரயமாக்க கூடாது. இருக்கின்ற உடைகளை வைத்துக் கொண்டு உடற்பயிற்சிக்கு செல்லுங்கள். இருக்கின்ற முதலீட்டை வைத்துக் கொ...

தோல்விகளை தூக்கி சுமக்காதீர்கள். அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

படம்
 நாம் நம்முடைய வாழ்வில் நிறைய  முயற்சிகளை மேற்கொண்டிருப்போம், பெரும்பாலும் அதில் தோல்விகளையே சந்தித்திருப்போம். அந்த தோல்வியின் தாக்கங்கள் நம்முள் தேங்கியிருக்கும்.  இப்பொழுது தானே ஒரு முயற்சியினை மேற்கொண்டோம், பிறகு இன்னொருநேரம் இன்னொரு முயற்சியினை மேற்கொள்வோம் என ஏற்பட்ட தோல்வியின் தாக்கம் அடுத்த முயற்சியினை எடுக்க நம்மை தாமதப் படுத்தும். ஏற்பட்ட தோல்வியில் இருந்து எதனால் தோல்வி அடைந்தோம் என்று கண்டறிந்து முன்னேறி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏற்பட்ட தோல்வியையும்,  அவமானத்தையும் மறந்து இன்று ஒரு புதிய நாள் இன்று ஒரு புதிய வாய்ப்பு உள்ளது அதற்காக உழைக்க நாம் கற்றுக் கொள்ளவேண்டும். நாம் எவ்வளவு இழந்தாலும் திரும்ப முயற்சிக்க இன்னொரு வாய்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். நாமாக நிறுத்தும் வரை நாம் தான் நம்முடைய எல்லை.....

சோகமாக இருக்காதீர்கள் . அது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு

படம்
 சோகமாக இருக்காதீர்கள் . அது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு  நம் வாழ்க்கையில் நாம் எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்கின்றன. சில சம்பவங்கள் நன்மை பயக்கின்றன. சில விசயங்கள் நமக்கு மோசமான உணர்வு நிலையையும், மிகுந்த துக்கத்தையும் தோற்றுவிக்கின்றன.  இதுவே வாழ்க்கையின் போக்கு. பல நேரங்களில் துன்பத்தை கடக்கின்ற மனப் பக்குவம் நேரம் கடந்தே வருகின்றன. மகிழ்ச்சியான விசயங்கள் கொடுக்கக் கூடிய விசயங்களை துன்பமான விசயங்களால் கொடுக்க முடியாது. துன்பங்கள் கொடுக்கக் கூடிய விசயங்களை இன்பமான நேரத்தால் கொடுக்க முடியாது. என்ன நடந்தாலும் சரி மீட்பு கண்டிப்பாக நடைபெறும். எனவே மன மகிழ்வோடு இருங்கள். எதை குறித்தும் அதிக பய உணர்வோடு இருக்க வேண்டாம். எதை குறித்தும் குற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். வாழ்வு மிகப் பெரியது. வாழ்வு அனைத்தையும் மாற்றக் கூடியது. எனவே அன்பர்களே சோகமாக இருக்காதீர்கள். களிப்போடு வாழ்க்கையை  கழியுங்கள்.

உழைப்பிற்கான பலன் தள்ளிப் போகுமே தவிர கிடைக்காமல் போகாது.

படம்
 உழைப்பிற்கான பலன் தள்ளிப் போகுமே தவிர கிடைக்காமல் போகாது.  நாம், நம் வாழ்வில் நம்மை மேம்படுத்திக் கொள்வதற்காக பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். கொஞ்சம் நாள்கள் அதனை சரியாக கடைபித்துக் கொண்டும் தொடர்ந்து அந்த முயற்சிகளை செய்து கொண்டு வருகிறோம்.  நாள்கள் செல்ல , செல்ல நாம் செய்து வந்த விசயங்களையும், முயற்சிகளையும் கைவிட்டு விடுவோம். மனதின் வலி தாங்கும் மனப்பான்மையானது. தொடர்ந்து ஒரு செயலை செய்ய செய்ய தான் அதிகமாகிறது. எனவே உங்களுடைய முயற்சிகளை நீங்கள் எப்போது நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ? அப்போது கொஞ்சம் உங்களை வலுப்படுத்தி அந்த முயற்சியினை விடாமல் தொடருங்கள். தோல்வி என்பது வெளி புறத்தில் இருந்து ஏற்படுவது அல்ல. அது உள்ளிருந்து தான் ஆரம்பமாகிறது. எனவே உள்ளத்தினை கொஞ்சம் கடினமாக வைத்திருங்கள். அதுவே கடினமான முடிவுகளை எடுக்க உதவும். ஒரு மரமானது ஒரே வெட்டில் விழுவதில்லை. ஒவ்வொரு வெட்டுமே அந்த மரத்தினை வெட்டி வீழ்த்துவதற்கு துணை புரிகிறது.

எதை செய்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள்.

படம்
 எதை செய்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள். நீங்கள் வாழ்வில் எதை அதிகமாக செய்கிறீர்களோ அதனை பொறுத்தே உங்களுக்கு நடக்கக் கூடிய விசயங்களாகட்டும், உங்கள் வாழ்க்கை ஆகட்டும்.  ஆகவே எந்த ஒரு விஷயம் குறித்தும் அலட்சியமாக இருக்காதீர்கள். சும்மா ஒரு முறை முயற்சி செய்து பார்க்க போகிறோம் என்பது போலவே தோன்றும். உதாரணமாக கொஞ்ச நேரம் போன் பார்த்து விட்டு வைத்து விடலாம் என்று தோன்றும் ஆனால் அது குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும்.  எனவே அன்றாட வாழ்க்கையில் நாம் என்ன செய்கிறோம் என்பதில் கூடுதல் கவனத்துடன் இருப்பது சிறப்பான ஒன்றாக அமையும்.

நீங்கள் மேம்பட விரும்பினால் வாழ்க்கை உங்களை முதலில் சுக்கு நூறாக உடைக்கும்

படம்
 நீங்கள் மேம்பட விரும்பினால் முதலில் வாழ்க்கை உங்களை சுக்கு நூறாக உடைக்கும். பல நேரங்களில் நாம் பலவிதமான பிரச்சினைகளில் இருந்தோ தோல்விகளில் இருந்தோ நாம் வெளி வந்திருப்போம். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையில் இந்தப் பிரச்சினைகள் ஓயாவே ஓயாது. உதாரணமாக 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எடுத்துக் கொள்வோம். நமது ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என எல்லோரும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நமக்கு சொல்லி இருப்பார்கள். "இந்த 10ஆம் வகுப்புத் தேர்வை மட்டும் நல்ல படியாக எழுதி முடித்து விடுப்பா அப்பறம் நல்ல ஊர் சுற்றலாம் என்று". அப்பறம் 12ஆம் வகுப்பு, கல்லூரி என்று நீண்டுக் கொண்டே போய் கொண்டிருக்கும். ஆனால் அடுத்தடுத்து பிரச்னைகள் வந்து கொண்டே தான் இருக்கும். அது தீரவே தீராது. நாம் வாழ்க்கையில் முன்னேறி செல்ல செல்ல புதிய அறிவு தேவைபடும். அதனால் தான் அந்த அறிவிற்காகவும், அனுபவத்திற்காகவும் வாழ்க்கை நமக்கு பிரச்சினைகளை வழங்குகிறது.  நாம் கொஞ்சம் சிரத்தையுடன் அந்த பிரச்சினைகளை கையாள வேண்டும். வெற்றியோ,தோல்வியோ அதை துணிவுடன் எதிர் கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தின் நியதியே அது தான்.