சோகமாக இருக்காதீர்கள் . அது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு
நம் வாழ்க்கையில் நாம் எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்கின்றன. சில சம்பவங்கள் நன்மை பயக்கின்றன. சில விசயங்கள் நமக்கு மோசமான உணர்வு நிலையையும், மிகுந்த துக்கத்தையும் தோற்றுவிக்கின்றன.
இதுவே வாழ்க்கையின் போக்கு. பல நேரங்களில் துன்பத்தை கடக்கின்ற மனப் பக்குவம் நேரம் கடந்தே வருகின்றன. மகிழ்ச்சியான விசயங்கள் கொடுக்கக் கூடிய விசயங்களை துன்பமான விசயங்களால் கொடுக்க முடியாது. துன்பங்கள் கொடுக்கக் கூடிய விசயங்களை இன்பமான நேரத்தால் கொடுக்க முடியாது.
என்ன நடந்தாலும் சரி மீட்பு கண்டிப்பாக நடைபெறும். எனவே மன மகிழ்வோடு இருங்கள். எதை குறித்தும் அதிக பய உணர்வோடு இருக்க வேண்டாம். எதை குறித்தும் குற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். வாழ்வு மிகப் பெரியது. வாழ்வு அனைத்தையும் மாற்றக் கூடியது.
எனவே அன்பர்களே சோகமாக இருக்காதீர்கள். களிப்போடு வாழ்க்கையை களியுங்கள்.

கருத்துகள்