இடுகைகள்

சிறிது சிறிதாக செய்யுங்கள்.

படம்
 வாழ்க்கையில் சில எதிர்பாராத சம்பவங்கள் நம்மை செயல் படாமல் நிலை குலைய செய்து விடுகின்றன.  அதிலிருந்து மீண்டு வந்து மறுபடியும் வாழ்க்கையை தொடங்குவது என்பது மிகவும் சவாலான விசயம்.  சோகமான அல்லது பயங்கர இழப்பான நிகழ்வு நம்மை மிகவும் சோர்வடைய செய்து விடும். இதில் இருந்து மீண்டு மறுபடியும் வாழ்வை தொடங்குவது என்பது எளிதான காரியம் அல்ல. ஒன்றிலிருந்து (from scratch)தொடங்குங்கள். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் திறமையாக வேலை செய்பவராக இருக்கலாம். அதை எல்லாம் மறந்து விட்டு மீண்டும் முதல் நாள் எவ்வாறு தொடங்கினீர்களோ அது போல மீண்டும் தொடங்குங்கள். இது மிகவும் சாதாரணமான ஒன்றாக தோன்றலாம். ஆனால் இது மிகவும் வலிமையான ஒன்று. ஏற்பட்ட நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் தொடங்குவது எளிதான ஒன்றல்ல. நாம் எவ்வளவு சிறப்பாக இருந்தோம். எப்போ என்ன எவ்வளவு குறைவாக செயல் படுகிறோம் என்று என்ன வேண்டாம். மறுபடியும் உங்களை கட்டமைக்க அது தான் முதல் படி. வாழ்வில் இடறி விழுவது இயல்பு தான். மீண்டு எழுந்து அதை தொடங்குவது தான், ஆகச் சிறந்த ஒன்றாக இருக்க முடியும்.

தொடர்ந்து உழையுங்கள். அதுவே முன்னேற்றத்திற்கான வழி

படம்
 தொடர்ச்சியாக ஒரு வேலையை செய்வது என்பது எளிதான காரியம் அல்ல.அதற்கு நிறைய தியாக மனப்பான்மை வேண்டும். ஒரே நாளில் எல்லா வளர்ச்சிகளும் அல்லது மாற்றங்களும் நிகழ்ந்து விடாது. அது அணு அணுவாக நிகழக்கூடிய ஒன்று. தொடர் உழைப்பின் வாயிலாக மட்டுமே மகத்தான காரியங்களை செய்ய முடியும். மிக முக்கியமான ஒரு விசயம் என்னவென்றால் வளர்ச்சியை மையமாக வைத்து செயல் படும் போது அதற்கென்று சிறிதுகாலம் காத்திருக்க வேண்டும். அலை ஒரே முறை மட்டும் வந்து மோதி பாறையின் கரைப்பது இல்லை. தொடர்ந்து அடிக்க கூடிய அலை பறையை கரைக்கிறது. எனவே தொடர் உழைப்பின் மீது கவனம் செலுத்துங்கள். வளர்ச்சி தானாகவே இருக்கும். வெற்றியை துரத்தாதீர்கள். வளர்ச்சிக்கான பாதையை மட்டும் கண்டறியுங்கள். அதில் நீங்கள் எதையும் பொருட்படுத்தாது முன்னேறி கொண்டே இருங்கள். உங்கள் இலக்கை அடைவீர்கள்.

சலிப்புணர்வுடன் இருங்கள்.

படம்
 சலிப்புணர்வு (Boredom)  இன்றைய உலகத்தில் சலிப்புணர்விற்கே இடமில்லாமல் போயிற்று. ஒரு வரிசையில் நிற்கிறோம் என்றால் அதற்குள் கைபேசியில் ஏதாவது ஒன்றை பார்க்க தொடங்கி விடுகிறோம். உணவு உண்ணும் போதும் கைபேசியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். சும்மா ஒரு அரை மணி நேரம் இருக்க முடிவதில்லை. இன்றைய நவீன உலகில் கைபேசி நிறைய இடங்களை ஆக்கிரமித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். மனிதன் ஒரு விசயத்தை சிரமேற்கொண்டு செய்ய விரும்பினால் இந்த சலிப்புணர்வையோ அல்லது பொறுமையையோ அல்லது சகிப்புத்தன்மையையோ நிச்சயம் கையாள வேண்டும்.  கைபேசியை விடுத்து மற்ற பொழுது போக்கு அம்சங்களையும் விடுத்து மனிதன் மெதுவாக செயல் பட வேண்டும். ஒரு முழுமுயற்சிக்கு அல்லது நெடு நீண்ட பயணத்திற்கு இந்த சலிப்புணர்வு இன்றி அமையாது.  மற்ற மக்களுக்கு எப்படியா சாகசமான வாழ்வை தேர்ந்தெடுக்கும் பொருட்டு அல்லது அர்ப்பணிப்பு உணர்வோடு ஏதோ ஒன்றை நீங்கள் செய்ய போகிறீர்கள் என்றால் இந்த சகிப்புத்தன்மையை நீங்கள் கற்றுக் கொண்டே ஆக வேண்டும்.  இது வாழ்வினை சூறையாடுவது போல் தோன்றலாம் ஆனால் இறுதியில் உங்கள் பயணத்திற்கு நிச்சயமாக ஒரு அர்த்தத...

பிறர் கூறுவதை காட்டிலும் உங்கள் சொந்த கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.

படம்
 வாழ்க்கையில் நாம் பல முக்கியமான தருணங்களை சந்தித்து இருப்போம். அந்த தருணத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய  கட்டாயத்தில் இருந்திருப்போம்.  இந்த சமயத்தில் தான் நம்மை சுற்றியுள்ள உறவினர்கள், நண்பர்கள் என மக்கள் அனைவரும் நம்மிடம் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களைக் கூறுவார்கள்.  இது பொதுவாக எல்லோருக்கும் நடக்கும் விசயம் தான். ஆனால் இது போன்ற பலவிதமான கருத்துக்கள் நமக்கு சந்தேகங்களையும், குழப்பங்களையும், பயத்தையும் உண்டாக்கும்.  எல்லோரும் என்ன இப்படி கூறுகிறார்கள் என்ற எண்ணம் உருவாகும். சரியான முடிவை நாம் எடுக்க வேண்டும் என்ற ஒரு செயற்கையான கட்டாயமான சூழலை நாமே நமக்கு அமைத்துக் கொள்வோம்.  இவையனைத்தும் இருக்கக்கூடிய விசயங்கள் தான். இதுபோன்ற தருணங்களில் உங்களுடைய சொந்த முடிவுகளை எடுங்கள். உங்கள் இதயத்தில் இருந்து எழக் கூடிய கருத்திற்கு முன்னுரிமை அளியுங்கள்.  உங்கள் வாழ்விற்கான முடிவுகளை நீங்களே எடுங்கள். அது எவ்வளவு பெரிய தோல்வியை அடைந்தாலும் பரவாயில்லை. அல்லது அது மிகப் பெரிய வெற்றியை அடைந்தாலும் பரவாயில்லை. உங்களுடைய வாழ்க்கையை நீங்களே தீர்மானியுங...

தொடங்குங்கள் முடிந்துவிடும்

படம்
 பொதுவாக நம் எல்லோருக்கும் சில கனவுகள் இருக்கும் அல்லது புதிய முயற்சிகளை தொடங்க வேண்டும் அல்லது புதிய பழக்கங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வாழ்க்கையில் நம்மை மேம்படுத்திக் கொள்ள நாம் புதிய முயற்சிகளைத் தொடங்குவோம்.  உதாரணமாக, காலையில் உடற்பயிற்சி செய்வது, நடைபயிற்சி மேற்கொள்வது போன்ற விசயங்களில் தொடங்கி தொழில் தொடங்குவது, இணைய தளங்களில் உங்களுக்கு என்று ஒரு புதிய பக்கத்தை உருவாக்குவது போன்ற விசயங்களாகட்டும். இதற்கெல்லாம் ஒரு நேரம் வரட்டும், பார்த்துக்கொள்வோம் என்று விட்டு விடுவோம். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தொழில் தொடங்குவது, மற்றும் கனவுகளை நோக்கிய பயணத்தைத் தொடங்குவது போன்ற நல்ல விசயங்களுக்கு நல்ல நாளையும் நல்ல நேரத்தையும் எதிர்ப் பார்த்துக் காத்துக் கொண்டிருப்போம். உடற்பயிற்சி கூடத்திற்கு (GYM) செல்வதற்கு சரியான உடைகள் இல்லையே என்று எண்ணுவது. தொழில் தொடங்க போதுமான முதலீடு அல்லது இடமோ இல்லை என்று காத்திருப்பது. இவையெல்லாம் நேர விரயமாக்க கூடாது. இருக்கின்ற உடைகளை வைத்துக் கொண்டு உடற்பயிற்சிக்கு செல்லுங்கள். இருக்கின்ற முதலீட்டை வைத்துக் கொ...

தோல்விகளை தூக்கி சுமக்காதீர்கள். அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

படம்
 நாம் நம்முடைய வாழ்வில் நிறைய  முயற்சிகளை மேற்கொண்டிருப்போம், பெரும்பாலும் அதில் தோல்விகளையே சந்தித்திருப்போம். அந்த தோல்வியின் தாக்கங்கள் நம்முள் தேங்கியிருக்கும்.  இப்பொழுது தானே ஒரு முயற்சியினை மேற்கொண்டோம், பிறகு இன்னொருநேரம் இன்னொரு முயற்சியினை மேற்கொள்வோம் என ஏற்பட்ட தோல்வியின் தாக்கம் அடுத்த முயற்சியினை எடுக்க நம்மை தாமதப் படுத்தும். ஏற்பட்ட தோல்வியில் இருந்து எதனால் தோல்வி அடைந்தோம் என்று கண்டறிந்து முன்னேறி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏற்பட்ட தோல்வியையும்,  அவமானத்தையும் மறந்து இன்று ஒரு புதிய நாள் இன்று ஒரு புதிய வாய்ப்பு உள்ளது அதற்காக உழைக்க நாம் கற்றுக் கொள்ளவேண்டும். நாம் எவ்வளவு இழந்தாலும் திரும்ப முயற்சிக்க இன்னொரு வாய்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். நாமாக நிறுத்தும் வரை நாம் தான் நம்முடைய எல்லை.....

சோகமாக இருக்காதீர்கள் . அது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு

படம்
 சோகமாக இருக்காதீர்கள் . அது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு  நம் வாழ்க்கையில் நாம் எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்கின்றன. சில சம்பவங்கள் நன்மை பயக்கின்றன. சில விசயங்கள் நமக்கு மோசமான உணர்வு நிலையையும், மிகுந்த துக்கத்தையும் தோற்றுவிக்கின்றன.  இதுவே வாழ்க்கையின் போக்கு. பல நேரங்களில் துன்பத்தை கடக்கின்ற மனப் பக்குவம் நேரம் கடந்தே வருகின்றன. மகிழ்ச்சியான விசயங்கள் கொடுக்கக் கூடிய விசயங்களை துன்பமான விசயங்களால் கொடுக்க முடியாது. துன்பங்கள் கொடுக்கக் கூடிய விசயங்களை இன்பமான நேரத்தால் கொடுக்க முடியாது. என்ன நடந்தாலும் சரி மீட்பு கண்டிப்பாக நடைபெறும். எனவே மன மகிழ்வோடு இருங்கள். எதை குறித்தும் அதிக பய உணர்வோடு இருக்க வேண்டாம். எதை குறித்தும் குற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். வாழ்வு மிகப் பெரியது. வாழ்வு அனைத்தையும் மாற்றக் கூடியது. எனவே அன்பர்களே சோகமாக இருக்காதீர்கள். களிப்போடு வாழ்க்கையை  கழியுங்கள்.