இடுகைகள்

இதற்காக தான் சென்னை அணியில் இருக்கிறேன்,இல்லையென்றால் எப்பொழுதே சென்றிருப்பேன் தோனி சொல்வது என்ன...???

படம்
 சென்னை அணியை வழிநடத்தி  மூன்று முறை ஐபிஎல் மகுடத்தை வென்று கொடுத்தவர் தோனி. இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்று கொள்கிறேன் என்று தன்னுடைய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பொழுது சுரேஷ் ரெய்னாவும் தானும் இந்திய அணியில்  இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருவரும் அடுத்தடுத்து இந்திய  அணியில் இருந்து ஓய்வு பெற்று  கொள்வதாக அறிவித்து பரபரப்பை  ஏற்படுத்தினர்.ஆனால் இன்னும் தோனி சென்னை அணிக்காக விளையாடி கொண்டிருக்கிறார்.சென்ற வருடம்  சென்னை அணி பிளே -ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. சென்னை அணி சென்ற வருடம் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்க்கு  தள்ளப்பட்டது.சென்ற வருடம் சென்னை அணி கேப்டன் தோனியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது."நீங்கள் இந்த வருடம்  சென்னை அணியில் இருந்து ஓய்வு பெற போகிறீர்களா? என்று கேள்வி  கேட்கப்பட்டது.அதற்கு தோனி "கண்டிப்பாக இல்லை" என்று பதில் கூறினார்.அணியில் இருந்து விடை பெறும் போது கோப்பையை வென்று ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவதே எனது  நோக்கம். இதனால் தான் தோனி  இன்னும் ஓய்வு பெறாமல் இருக்கிறார். கடந்த ஆண்டு கடை...

டோனிக்கும் ரெய்னாக்கும் கருத்து வேறுபாடா....???

படம்
 ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில்  நடந்து வருகிறது.இதில் எட்டு அணிகள்  விளையாடி வருகின்றன.சில சமயம்  ஒவ்வொரு அணி வீரர்களுக்கும்  இடையே கருத்து  வேறுபாடு ஏற்படும். வெவ்வேறு அணி வீரர்களுக்கு இடையே வாக்குவாதமும் கைகலப்பும் எற்படும். நடுவர்கள் முலம் பிரச்சனை தீர்க்கப்படும். இதற்கிடையே பிரபல அணியான  சென்னை அணியின் வீரர்களுக்கு  இடையே கருத்து வேறுபாடு  ஏற்பட்டுள்ளது.    அது வேறு யாரும் அல்ல. நம்ம தல  டோனிக்கும் சின்ன தல ரெய்னாக்கும்  தான். கடந்த சில நாட்களாக இவர்கள் எந்த ஒரு ஆட்டத்திலும் சரியாக  பேசி  கொள்வதில்லை. ஐதாரபாத் அணிக்கு  எதிரான ஆட்டத்தில் ஸ்லிப்பில் நின்று  கேட்ச் செய்த ரெய்னா அருகில் இருந்த டோனியுடன் மகிழ்ச்சியை  வெளிபடுத்தவில்லை. இவ்வாறு இரு  வீரர்களுக்கும் இடையே கருத்து  வேறுபாடு ஏற்பட்டால் அணி எவ்வாறு  வெற்றியின் பாதையில் செல்லும்.  இவ்வாறு பல நேரங்களில்  நிகழ்ந்துள்ளது.இரு நட்சத்திர  வீரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு...

மத்திய அரசால் இது சாத்திமா ...?கோவிட் -19 தடுப்பூசி இலவசமா...?

படம்
  கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி உயிர்களை கொன்று குவித்து  வருகிறது.தற்போது இரண்டாம் அலை தொடங்கி உள்ளது. இது குறித்து மத்திய  அரசு கூறுகையில், முகக்கவசம்  அணிவதன் மூலம் நோய் பரவுவதை  தடுக்க மட்டுமே முடியும். நோயை வெல்ல  வேண்டுமேனில் தடுப்பூசி போட்டால் மட்டுமே சாத்தியம். 18 வயது நிரம்பியவர்களுக்கு  இலவசமாக தடுப்பூசி விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், 2 வது டோஸை வெளியிட்ட நிலையில், தற்போது 3வது டோஸை தயாரித்து  வெளியிட உள்ளது.தடுப்பூசி விலை  அதிகமாக உள்ள நிலையில்,மக்களுக்கு  இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய  அரசால் முடியுமா.....? தடுப்பூசி  போட்டாலும் நோய் பரவலை கட்டுப் படுத்த முடியுமா....? என்று பல கேள்வி எழுந்துள்ளது.

வெற்றி மாறன் ஆரம்பிச்சுடாரு விடுதலை வெற்றி அடையுமா...?

படம்
பிரபல இயக்குனர் வெற்றி மாறன்   அவர்களின் இயக்கத்தில் தனுஷ்  நடிப்பில் 'அசுரன்' எனும் திரைப்படம் வெளியாகி  வெற்றி அடைந்தது. வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் பல படங்கள் வெளிவந்து வெற்றி அடைந்து உள்ளன. வெற்றி மாறன் படம் என்றாலே ரசிகர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.இந்நிலையில்  விஜய்சேதுபதியும், சூரியும் வெற்றி   மாறன் இயக்கத்தில் நடித்து வருகிறனர் படத்திற்கு 'விடுதலை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இதில் சேதுபதி  வாத்தியாரகவும் சூரி நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.இளையராஜா இசை அமைக்கிறார்.எந்த அறிவிப்பும் இன்றி படத்தின் முதல் பார்வை  வெளியானது.வெற்றி மாறன் படம்  என்றாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சம்  இருக்காது.எனவே இப்படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தோனிக்கு உடற்தகுதி இல்லையா?? தோனி என்ன சொல்கிறார்.

படம்
 மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த  ஆட்டத்தில் சென்னை ராஜஸ்தான்அணிகள்  மோதின.இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தோனி 17  பந்துகளை சந்தித்து 18 ரன்கள் மட்டுமே எடுத்தார்.  இதைப் பற்றி தோனி கூறுகையில், ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. எல்லா நேரங்களிலும் சிறப்பாக ஆட முடியாது.ஆனால் என்னுடைய ஆட்ட திறனில் கவனமாக இருப்பேன்.எனக்கு  வயதாகி விட்டது,ஆனாலும் என்னுடைய உடற்தகுதியை சிறப்பாக வைத்து  கொள்ள விரும்புகிறேன்.என்னை யாரும் உடற்தகுதி இ்ல்லாதவர் என்று கூறி விட கூடாது. அதில் நான் கவனமாக  இருப்பேன்.ஓய்வு பெறுவது பற்றி நான்  எந்த முடிவும் எடுக்கவில்லை. பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதால் தான்,இந்த  ஆட்டத்தில் வெற்றி பெற முடிந்தது. நெருக்கடியான சூழலை சமாளிக்க கற்று கொண்டனர். அணி தலைவனாக இருந்து வீரர்களுக்கு கற்றுகொடுக்க வேண்டியது இதுதான் என்றார்.

அழகர் வருவாரா? நடக்குமா சித்திரை திருவிழா...?

படம்
  சித்திரை திருவிழா என்பது தமிழகத்தில்  பிரசித்திப் பெற்ற திருவிழா ஆகும். விழாவின் சிறப்பே அழகர் வைகையில் எழுந்தருளுதல் தான்.சென்ற வருடம்  கொரோனா நோய் பரவல் காரணமாக விழா நடை பெறாமல் போய் விட்டது.  இந்த வருடமும் அதே கதை தான் தொடர்கிறது. இதனால் பக்தர்கள் சார்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. நீதிபதிகள் சிவஞானம்,ஆனந்தி முன்பு நேற்று விசாரனைக்கு வந்தது.  கொரோனா நோய் தொற்று தீவிரமாக உள்ள நிலையில் விழாவை  பாதுகாப்பாக நடத்தமுடியாது என்றனர் நீதிபதிகள். பின்னர் மனுதாரர்களின் வக்கில் ஆஜராகி விழாவை பக்தர்கள் இல்லாமல் நடத்தி,தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாவது வெளியிட வேண்டும் என்றனர்.அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கையும் தள்ளுபடி செய்தனர்

அருண் விஜயின் அடுத்த படம் ,முதல் பார்வை வெளியானது

படம்
  அருண்விஜய் தற்போது அறிவழகனுடன் இணைந்து பணி புரிந்து வருகிறார். குற்றம் 23 தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். படத்திற்க்கு பார்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.படத்தை ஆல் இன் ஆல்  தயாரிப்பு நிறுவனர் விஐய் ராகவேந்திரா தயாரிக்கிறார்.இப்படம் ஸ்பை  த்ரில்லர் படமாக இருக்கம் என்று இயக்குனர் கூறுகிறார். .தற்போது படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. படத்திற்க்கு பார்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.படத்தை ஆல் இன் ஆல்  தயாரிப்பு நிறுவனர் விஐய் ராகவேந்திரா தயாரிக்கிறார்.இப்படத்தின்  நாயகியாக ரெஜினா கேசன்ட்ரா அறிமுகமாகிறார்.குற்றம் 23 படத்தை  காண்கையில் மருத்துவ த்ரில்லராக இருந்தது, பார்டர் படத்தை பொருத்த  வரையில் ஸ்பை த்ரில்லாக தயாரித்து உள்ளனர், தீவிரவாதத்தை  எதிர்ப்பதுப் போன்றும் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையிலும் படத்தின் கதை களம் அமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.