சிந்தனைகள், எண்ணங்கள்:- வாழ்க்கையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றி பார்ப்போம்

 எண்ணங்கள்

 சிந்தனைகள் :



தொடர்ந்து நாம் சிந்திக்க கூடிய சிந்தனைகளும் எண்ணங்களும் தான் நம் வாழ்க்கையினை கட்டமைக்கின்றன. நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் அடித்தளமாக அமைவதும் இதுவே. பரிணாம வளர்ச்சியின் படி ஒரு கதை ஒன்றைப் பார்ப்போம். 


ஒட்டக சிவிங்கிகளைப் பற்றியது இது. பண்டைய காலத்தில் ஒட்டக சிவிங்கிகளின் கழுத்து மிகப் பெரியது ஒன்றும் கிடையாது. குதிரைகளை போலவே அவற்றிற்கும் கழுத்துப் பகுதி சாதாரணமாகவே இருந்தது. இந்த ஒட்டக சிவிங்கிகள் புற்களையும், இலை தழைகளையும், உண்டு வாழ்ந்து வந்தன. நாளடைவில் தரையில் இருக்கும் புற்களின் அளவுக் குறைந்து போக, மரங்களின் கிளைகளில் உள்ள இலைகளை சாப்பிட்டு வந்தன.





நாட்கள் செல்ல செல்ல மரங்களில் உயரமான கிளைகளில் மட்டுமே இலைகள் இருந்தன. இதனால் இலைகளை எட்டி பிடித்து உண்ணுவதற்கு அவைகளுக்கு சிரமமாக இருந்தது.தொடர்ந்து எட்டி எட்டி பிடித்து உண்டுக் கொண்டு இருந்தன. 



தொடர்ந்து எட்டி எட்டி சாப்பிட்ட வண்ணம் இருந்தாலும் , வேறு வழியில்லை கழுத்தை உயர்த்தி தழைகளை சாப்பிட்டாக வேண்டிய எண்ண உந்துதலும் காலப் போக்கில் இந்த மிகப் பெரிய கழுத்து உருவாவதற்கு காரணமாகி விட்டன.



இதே போல் தான், நாம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் சிந்திக்கக் கூடிய ஒவ்வொரு சிந்தனைகளும், எண்ணங்களும் நம் வாழ்க்கையினை நமக்கேத் தெரியாமல் செதுக்கிக் கொண்டு இருக்கின்றன. அதனால் தான் சுவாமி விவேகானந்தர் , " இருப்பதிலே மிகப் பெரிய பாவம் உங்களை நீங்களே பலவீனர்கள் என்று நினைத்து கொள்வது"  என்கிறார். புருஸ்லீ "விளையாட்டாக கூட உங்களை நீங்கள் பலவீனர் என்று கூறாதீர்கள்" என்று கூறுகிறார்.



எனவே அன்பு மக்களே நல்லதை சிந்தியுங்கள் நல்லதாகவே சிந்தியுங்கள்.




கருத்துகள்