கர்ணன் படம் வன்முறையை தூண்டுகிறதா...??? மக்கள் கருத்து என்ன...???

 


பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் 

திரைப்படம் வெளியானது.இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்

 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதில் கதையின் நாயகனை

 சார்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகமாக சித்தரித்து உள்ளனர். 


அதே சமயம் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளன. இது 

குறித்து மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து இடுகையில் 

"வன்முறை காட்சிகளைத் தவிர்த்து இருக்கலாம், எந்த ஒரு பிரச்சனைக்கும்

வன்முறை தீர்வாகாது. சாலை மறியல் செய்து இருந்தாலே அனைத்துப்

பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்து இருக்கும். 

  
                                                 மாரி செல்வராஜ்


போராடுவது வேறு வன்முறை வேறு . மக்களிடம் இந்த புரிதலை கொண்டு

வர வேண்டும். திரையில் என்ன காண்கிறோமோ அது தான் எண்ணத்திலும்

தோன்றும். ஆகையால் வன்முறையை கையால்வதை தவிர்த்து,சிந்தித்து

பிரச்சனையை தீர்ப்பது போல் படமாக்கி இருக்கலாம்.என்று மக்கள் தங்கள்

 கருத்தைப் பதிவிடுகிறார்கள்.பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனரும்

இவர் தான்.சமூக வழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்படம் உள்ளதாக

ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.




கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
NICE

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சோகமாக இருக்காதீர்கள் . அது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு

தற்போது நடந்து வரும் யூரோ கால்பந்து தொடரில் இந்த அணி தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரொனால்டோ அணியே தோற்று போகும் என்று கணிக்கப்படுகிறது.

குணநலன்: வெற்றிக்கு இணையான விசயங்களை நமக்கு அளிக்கக்கூடிய பண்பு